Published : 07 Mar 2015 09:46 AM
Last Updated : 07 Mar 2015 09:46 AM

மார்ச் 11-ம் தேதி சென்னையில் முற்றுகை போராட்டம்: வைகோ

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காவிரிப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் 11-ம் தேதி சென்னையில் சுங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் வரும் 17-ம் தேதி தேனியில் விழிப்புணர்வு ஊர்வலமும், 18-ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளோம்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரிப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் 11-ம் தேதி சென்னையில் சுங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். அதேபோல, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x