Published : 06 Mar 2015 11:00 AM
Last Updated : 06 Mar 2015 11:00 AM

கட்டாயம் தேவை, கழிப்பறை!

பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம்குறித்த தலையங்கம் அருமை.

பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாமல் அவதியுறும் மாணவர்களின் பரிதாப நிலையைத் தலையங்கம் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. கழிப்பறையைப் பயன்படுத்த முடியாததால் நீண்ட நேரம் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொள்வதால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் கெடுதல்களை இதுவரை யாரும் கணக்கெடுத்ததோ பதிவுசெய்ததோ கிடையாது என்ற தகவல் பதைபதைக்க வைத்தது.

அரசு மிகவும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

***

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் நாம் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறைகள் அமைப்பது பற்றியும் அவற்றைப் பராமரிப்பது பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். பல பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டிருக்கும்.

ஆனால், போதிய தண்ணீர் வசதி இருக்காது. மேலும், சுகாதாரம் பற்றிய அடிப்படை அறிவைப் பள்ளிகள் மாணவர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. மாணவர்களுக்கு சுகாதாரம் பற்றிய அந்த அடிப்படை அறிவு இல்லாததால்தான் வளர்ந்த பின்னும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. இவற்றுக்கெல்லாம் ஆக்கப்பூர்வமான தீர்வு காணப்பட வேண்டும்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x