Published : 25 Mar 2015 09:34 AM
Last Updated : 25 Mar 2015 09:34 AM

ரயில்களில் கூடுதல் ஏசி பெட்டிகள்

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சில ரயில்களில் கூடுதல் ஏசி பெட்டிகள் சேர்க்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஹஜ்ரத் நிஜாமுதீனிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ராஜ்தானி விரைவு ரயிலில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதி வரையும், சென்னை சென்ட்ரல் முதல் ஹஜ்ரத் நிஜாமுதீன் செல் லும் ராஜ்தானி ரயிலில் ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரையும் கூடுதலாக ஒரு ஏசி 2 டயர் பெட்டி சேர்க்கப் படும்.

அதேபோல், ஹஜ்ரத் நிஜா முதீனிலிருந்து திருவனந்தபுரம் வரும் ராஜ்தானி விரைவு ரயிலில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரையும், திருவனந்தபுரத்திலிருந்து ஹஜ்ரத் நிஜாமுதீன் செல்லும் ராஜ்தானி ரயிலில் ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையும் கூடுதலாக ஒரு ஏசி 2 டயர் பெட்டி சேர்க்கப்படும்.

கொச்சுவேலியிலிருந்து சண்டீகர் வரும் சம்பர்க் க்ராந்தி விரைவு ரயிலில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரையும், சண்டீகரிலிருந்து கொச்சுவேலி செல்லும் ரயிலில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதி வரையும் கூடுதலாக ஒரு ஏசி மூன்று டயர் பெட்டி சேர்க்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x