Published : 21 Feb 2015 10:40 AM
Last Updated : 21 Feb 2015 10:40 AM
வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக வி.ஏ.ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
காவல்துறை நவீனமயமாக்கல் (சென்னை) பிரிவு ஐஜி வி.ஏ.ரவிக்குமார், வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் கருணாசாகர், காவல்துறை நவீனமயமாக்கல் (சென்னை) பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT