Published : 21 Feb 2015 11:31 AM
Last Updated : 21 Feb 2015 11:31 AM

இவரைத் தெரியுமா?- பிரவீண் சின்ஹா

$ இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஜபாங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

$ டெல்லி பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும், ஐஐஎம் கொல்கத்தாவில் மேலாண்மை படிப்பில் உயர்கல்வியும் முடித்தவர்.

$ மெக்கென்ஸி, மைக்ரோசாப்ட், மற்றும் மாருதி உத்யோக் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

$ இந்தியா தவிர சீனா, தைவான், தாய்லாந்து நாடுகளில் உள்ள சில மின் உற்பத்தி மற்றும் சிமென்ட் நிறுவனங்களின் ஆலோசனை குழுவிலும் இருக்கிறார்.

$ மத்திய வணிக மற்றும் வர்த்தக அமைச்சகம் மூலம் வழங்கப்படும் ஆன்லைன் ரீடெய்லர் விருதை முதலில் வாங்கியது இவரே.

$ பணியாளர்களை ஊக்கப்படுத்துவார். தன்னம்பிக்கை கொண்டவர். குழுவை மேம்படுத்துவது, வேலையில் கவனத்தை குவிப்பதன் மூலமே இலக்கை அடைய முடியும் என்று சொல்வார்.

$ நமது தொழிலில் நாம் தலைவராக வேண்டும் என்றால் நமது பணியாளர்களின் நலன்களின் கவனம் செலுத்த வேண்டும் என்பது இவரது கொள்கை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x