Published : 12 Jan 2015 10:45 AM
Last Updated : 12 Jan 2015 10:45 AM
கடந்த ஆண்டு கைது செய்யப் பட்ட ஐ.எஸ்.தீவிரவாதி ஆரிப் மஜீத்தின் இணைய விவரங்களை பத்திரப்படுத்தக் கோரி அமெரிக் காவிடம் இந்தியா உதவி கேட்டுள்ளது.
ஆரிப் மஜீத் வழக்கை சிறப்புப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இணையம் வழியாக மஜீத் மேற்கொண்ட விஷயங்களைப் பாதுகாக்கச் சொல்லி அமெரிக் காவிடம் அது உதவி கேட்டது.
அதனை ஏற்றுக்கொண்டு உதவ முன் வந்துள்ள அமெரிக்கா, இதை மேற்கொள்வதற்கு இந்திய நீதி மன்றத்தின் அனுமதி வேண்டும் என்று கேட்டது. அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்றிடம் இருந்து தேவையான அனுமதியைப் பெற்று அதை அமெரிக்காவிடம் ஒப்படைத் துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் `வாட்ஸ் அப்', `டேங்கோ' மற்றும் `கிக்' போன்ற சமூக வலைதளங்களில் `வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்' எனும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துகின்றன. எனவே அதில் உள்ள விஷயங்களை குறிப்பிட்ட காலத்துக்கு அவை சேமித்து வைக்கின்றன.
அதேபோல `ஸ்கைப்' எனும் வலைதளத்துக்கும் மஜீத் குறித்து தகவல்களைப் பாதுகாத்து வைக்கச் சொல்லி என்.ஐ.ஏ. கடிதம் எழுதியுள்ளது.
இராக் மற்றும் சிரியாவில் தீவிர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருந்தபோது இந்தச் சமூக வலை தளங்களைப் பயன்படுத்தி தன் குடும்பத்தினர் மற்றும் காதலியுடன் மஜீத் உரையாடியிருக்கலாம் என்று என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது.
எனவே, இந்த இணைய நட வடிக்கைகள் மூலம் துப்பு கிடைக்கலாம் என்று அது யோசிப் பதால் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT