Published : 18 Nov 2014 09:49 AM
Last Updated : 18 Nov 2014 09:49 AM

அசோக் குமார் புர்வாஹா - இவரைத் தெரியுமா?

$ இன்ஜினீயர்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். ஜனவரி 2009-ம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார். எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் 37 வருட அனுபவம் மிக்கவர்

$ டெல்லி பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் முடித்தவர். படித்து முடித்தவுடன் 1977-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இணைந்தார்.

$ 1985-ம் ஆண்டு கெயில் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு பல முக்கிய பொறுப்புகளில் நாடு முழுக்க பணிபுரிந்தார். 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை மஹாநகர் கேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

$ 2006-ம் ஆண்டு கெயில் நிறுவனத்தின் இயக்குநராக (பிஸினஸ் மேம்பாடு) பொறுப்பேற்றார். 2009 இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றார்.

$ இவர் தலைமையில் ஸ்டார் பிஎஸ்யூ விருது இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்துக்குக் கிடைத்தது.

$ இந்திரபிரஸ்தா கேஸ் மற்றும் ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x