Published : 26 Oct 2014 06:37 PM
Last Updated : 26 Oct 2014 06:37 PM
ஆவின் அரசு பால் உயர்வை குறைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஆவின் பால் விலை தனியார் பால் விற்பனை விலையைவிட அனைத்து வகைகளிலும் லிட்டருக்கு ரூபாய் 10 குறைவாகவே இருந்து வருகிறது.
தனியார் பால் விற்பனையை விலையை விட, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10, குறைவாக இருந்ததால் விவசாயிகளுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க இயலவில்லை.
இந்த நிலையில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 22.5 லட்சம் விவசாயிகளுக்கு பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியா ஒன்றாகும்.
ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துவது ஆவின் பாலை மட்டும் தான். எனவே, அவர்கள் தனியார் பால் விற்பனை விலை உயர்வை அறிந்திருக்க நியாயம் இல்லை.
கடந்த தி.மு.க அரசு விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியிலும், அவற்றைச் சமாளித்து மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாகச் செய்து வரும் தமிழக அரசு, மக்கள் நலன் கருதி, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு என்பதை மறுபரிசீலனை செய்து முடிந்தவரை விலை உயர்வை குறைத்திட வேண்டும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT