Published : 30 Sep 2014 10:17 AM
Last Updated : 30 Sep 2014 10:17 AM
நடிகர் சரத்குமார் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறைக்கு நேற்று காலை வந்தார். மாலை 4 மணி வரை காத்திருந்தும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, “ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தீராத மன வலியை தந்திருக்கிறது. நாங்கள் எப்போதும் உங் களுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதியளிக்க முயற்சித்தேன்.ஆனால் என்னை உள்ளே அனு மதிக்கவில்லை.
இது இறுதித் தீர்ப்பு அல்ல. இன்னும் உயர்நீதிமன்றமும், உச்சநீதி மன்றமும் இருக்கிறது. தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண் டனை அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT