Published : 21 Aug 2014 02:43 PM
Last Updated : 21 Aug 2014 02:43 PM
இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று 400 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயமடைந்தனர்.
இமாச்சல பிரதேசம் கினார் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. 35 பயணிகளுடன் சங்லா எனுமிடத்தில் இருந்து கப்லா நோக்கி சென்றபோது விபத்து நடைபெற்றது. விபத்தில் 13 பயணிகளுடன் சேர்ந்து பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் பலியாகினர்.
சம்பவம் குறித்து போலீஸ் துணை கமிஷனர் டி.டி.சர்மா கூறுகையில்: "சம்பவ இடத்திலேயே இறந்த சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT