Published : 22 May 2014 11:00 AM
Last Updated : 22 May 2014 11:00 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு வரிசைக்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள், தரிசனத்திற்கு கோவிலுக்குள் செல்லும்போது மிகவும் சிரமப்படுவதாக வந்த புகார்களின் பேரில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காத வகை யில் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று வைகுண்டம் காம்ப்ளக்ஸில் செருப்பு அணிந்து செல்லும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அறிவுறுத்தலின்படி, திருப்பதி ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக பதிவேட்டில் கையெழுத்திட்டால்தான் இந்துக் கள் அல்லாதோரை தரிசனத்திற்கு அனுமதிப்போம்.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், துலாபாரம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் இதற்கான டி.வி.க்களும் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களின் நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவிலுக்குள் உள்ள வெள்ளி வாசலில் இருந்து, தங்க வாசல் வரை 3 வரிசையில் க்யூ லைன் அமைக்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மாயமான நகை திரும்ப கிடைத்துள்ளது. ஆனால், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT