Last Updated : 22 Oct, 2017 12:50 PM

 

Published : 22 Oct 2017 12:50 PM
Last Updated : 22 Oct 2017 12:50 PM

புத்துணர்வு தரும் கேரட் பானம்: கேரட் கீர்

என்னென்ன தேவை?

கேரட் - 2

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – ஒரு கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

பொடித்த முந்திரி, பாதாம் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவையுங்கள். கேரட்டைக் கழுவித் தோல் நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் நெய்விட்டு, கேரட்டைச் சேர்த்து வதக்குங்கள். காய்ச்சிய பாலை அரை கப் எடுத்து அதில் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கிவிடுங்கள். ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து மீதமுள்ள பாலை கேரட்டுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வையுங்கள். குளிர்ந்தவுடன் எடுத்து பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, குடிக்கக் கொடுத்தால் குழந்தைகள் பாத்திரத்தைக் காலி செய்துவிடுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x