Last Updated : 27 Nov, 2016 01:06 PM

 

Published : 27 Nov 2016 01:06 PM
Last Updated : 27 Nov 2016 01:06 PM

பத்தியக் குழம்பு

என்னென்ன தேவை?

புளிக் கரைசல் (கெட்டியாகக் கரைத்தது) - ஒரு கப்

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

முருங்கைக் காய், கத்திரிக்காய் – தலா ஒன்று

பூண்டு - 15 பல்

வெங்காய வடகம் - சிறிதளவு

நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

வறுத்து, அரைக்க:

காய்ந்த மிளகாய் - 2

மிளகு, சீரகம் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் நல்லெண்ணெய்யை விட்டு பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள்.

அதில் வெங்காய வடகத்தைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், முருங்கைக் காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய்கள் பாதி வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கிவையுங்கள். சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, இந்தக் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். பிள்ளைப்பேறு கண்ட பெண்கள் இந்தக் குழம்பைச் சாப்பிட்டுவரப் பால் சுரக்கும். மிளகு வயிற்றுப் புண்ணை ஆற்றும். வெங்காய வடகத்தில் உள்ள விளக்கெண்ணெய் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளும்.


ராஜகுமாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x