Last Updated : 19 Jul, 2015 01:03 PM

 

Published : 19 Jul 2015 01:03 PM
Last Updated : 19 Jul 2015 01:03 PM

ஆடிக் கூழ்

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு 100 கிராம்

பச்சரிசி 25 கிராம்

உளுந்து 1 டீஸ்பூன்

வெல்லம் கால் கிலோ

நெய் 50 கிராம்

எப்படிச் செய்வது?

பொதுவாக கேழ்வரகு அல்லது சோள மாவில் காய்ச்சக்கூடிய கூழைத்தான் பலரும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இந்த இனிப்புக் கூழைச் செய்யலாம். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். உளுந்தையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாக வறுக்கவும். அரைத்த பொருட்களை மாவாக அரைக்கவும்.

பாதியளவு நெய்யைக் காயவைத்து, மாவுடன் கலந்து, கிளறவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, இளம் பாகாகக் காய்ச்சவும். இதனுடன் மாவைச் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். சுவை மிகுந்த இந்த ஆடிக் கூழ் உடலுக்கு வலிமையை தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x