Published : 01 Mar 2020 11:24 AM
Last Updated : 01 Mar 2020 11:24 AM

தலைவாழை: நூல்கோல் கபாப்

தொகுப்பு: ப்ரதிமா

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

என்னென்ன தேவை?

நூல்கோல் - 2
கடலை மாவு - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
ஆம்சூர் தூள், தனியா தூள்
- தலா 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
அரிந்த புதினா, மல்லித்தழை
- தலா 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

நூல்கோலைத் தோல் சீவி சிறு துண்டுகளாக அரிந்து உப்பு சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். கடலை மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த கடலைமாவு, மசித்த நூல்கோல், நறுக்கிய பச்சை மிளகாய், ஆம்சூர் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், அரிந்த மல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x