Published : 23 Feb 2020 10:18 AM
Last Updated : 23 Feb 2020 10:18 AM

பூவெல்லாம் சமைத்துப்பார்! - செம்பருத்தி புளிக்குழம்பு

தொகுப்பு, படங்கள்: இரா.கார்த்திகேயன்

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

என்னென்ன தேவை?

சிவப்புச் செம்பருத்தி - 6
உரித்த சின்ன வெங்காயம், பூண்டு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த வெந்தயம்,
பெருங்காயப் பொடி - தலா 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மிளகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய தக்காளி - 1
புளிக்கரைசல் - ஒரு சிறிய கப்

எப்படிச் சமைப்பது?

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகைப் போட்டுத் தாளியுங்கள். மிளகு பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்குங்கள். அதில் புளிக்கரைசல், மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். பின்பு பொடியாய் நறுக்கிய செம்பருத்திப்பூவைச் சேர்த்து, மேலே வெந்தயப் பொடியையும் பெருங்காயப் பொடியையும் தூவி நன்றாகக் கிளறி இறக்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x