Published : 12 Jan 2020 11:18 AM
Last Updated : 12 Jan 2020 11:18 AM

புதுமைப் பொங்கல்: சொஜ்ஜியப்பம்

என்னென்ன தேவை?

ரவை - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - சிட்டிகை
மைதா - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள். இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள். ரவை வெந்ததும் தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள். இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள். வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜியப்பத்தைப் பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x