Published : 22 Sep 2019 10:44 AM
Last Updated : 22 Sep 2019 10:44 AM

தலைவாழை: மட்டர் கி நிமோனா

தொகுப்பு : ப்ரதிமா

மட்டர் கி நிமோனா

என்னென்ன தேவை?

பச்சைப் பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு – 1
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – அரை கப்
மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டுப் பொரித்துதெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஊறவைத்த பட்டாணியை வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். மீதி பட்டாணியை வேகவைத்து அதில் பாதியளவு பட்டாணியை மட்டும் மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி ஆறியதும் அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த கலவையை மீண்டும் வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீதமுள்ள பச்சைப் பட்டாணியைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பட்டாணி, வறுத்த உருளைக் கிழங்கு இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு கரம் மசாலாவைச் சேர்த்துக் கொதிக்கவைத்து மல்லித்தழையைத் தூவி இறக்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x