Published : 09 Feb 2015 01:39 PM
Last Updated : 09 Feb 2015 01:39 PM

இனிக்கும் போளி

என்னென்ன தேவை?

பூரணம் செய்ய

கடலைப் பருப்பு - கால் கிலோ

வெல்லம் - 150 கிராம்

தேங்காய் மூடி - 1

ஏலக்காய் - 4

மேல் மாவு:

மைதா மாவு - 150 கிராம்

உப்பு - சிறிதளவு

சோடா உப்பு - 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும். வெல்லத்துடன் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றிப் பாகு காய்ச்சவும். முதலில் வெல்லக் கரைசல் சிறிது கொதித்ததும் வடிகட்டி, பின் பாகு காய்ச்சவும். கொதித்த வெல்லக் கரைசலில் முக்கால் பதம் வெந்த கடைப் பருப்பை மசித்துச் சேர்க்கவும். அதனுடன் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

மைதா மாவில் 1 சிட்டிகை சோடா உப்பு, சிறிது உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி சற்றுத் தளர்வாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தட்டி, நடுவில் சிறிது பூரணத்தை வைத்து, எல்லாப் பக்கமும் மூடி மென்மையாகத் தட்டவும். இதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, சிறிது நெய் ஊற்றிப் புரட்டியெடுத்தால் சூடான, சுவையான போளி தயார்.

பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம். பெரியவர்களுக்கும் பிடித்த இனிப்பு இது. வெளியூர் செல்லும்போதும் எடுத்துச் செல்லலாம். இரண்டு நாட்கள்வரை கெடாது.

- ஆர். புனிதவதி ரெங்கசாமி, திருவாரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x