Last Updated : 08 Jan, 2017 03:42 PM

 

Published : 08 Jan 2017 03:42 PM
Last Updated : 08 Jan 2017 03:42 PM

பொங்கலோ பொங்கல்: புட்டரிசிப் பொங்கல்

என்னென்ன தேவை?

புட்டரிசி - 200 கிராம்

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு - தலா 50கிராம்

வெல்லம் - 300 கிராம்

வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 10

ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய் பொடி - சிறிதளவு

பச்சைக் கற்பூரம் - கால் சிட்டிகை

நெய் – 100 கிராம்



எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் புட்டரிசி, ஒரு டீஸ்பூன் நெய், தேவையான தண்ணீர் சேர்த்துக் குழைவாக வேகவைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து லேசாகக் கொதிக்க விட்டு வடிகட்டுங்கள். பிறகு பாகு பதத்தில் காய்ச்சி, வேகவைத்த அரிசி – பருப்பு கலவையோடு சேர்த்துக் கிளறுங்கள். கலவை தளர்வாக இருக்கும்போது பாதி நெய் விட்டு நன்றாகக் கிளறுங்கள். வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றைச் சேருங்கள். ஏலப் பொடி, ஜாதிக்காய் பொடி இரண்டையும் நெய்யில் பொரித்துச் சேருங்கள். பச்சைக் கற்பூரத்தைப் பொடித்துச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள்.

லட்சுமி சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x