Last Updated : 28 Oct, 2014 04:45 PM

 

Published : 28 Oct 2014 04:45 PM
Last Updated : 28 Oct 2014 04:45 PM

தில் பசந்த்

என்னென்ன தேவை?

வெள்ளை பூசணித் துருவல் - 2 கப்

பால்கோவா,

சர்க்கரை - தலா அரை கப்

நெய் - 8 டீஸ்பூன்

உடைத்த முந்திரி துண்டுகள் - 3 டீஸ்பூன்

ஏலப்பொடி - 1 சிட்டிகை

லெமன் ஃபுட் கலர் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் 5 டீஸ்பூன் நெய்விட்டு, துருவிய பூசணியைச் சேர்த்து வதக்கவும். அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதனுடன் பால்கோவாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு சர்க்கரை, ஏலப்பொடி, ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். சற்றுத் தளர்வாக வந்ததும் மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து, இறக்கிவைக்கவும். இது கோதுமை அல்வா போல் கெட்டியாக இருக்கக் கூடாது. சற்று இளக்கமாக இருக்க வேண்டும்.

குறிப்பு: ராஜகுமாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x