Last Updated : 18 Jun, 2017 01:05 PM

 

Published : 18 Jun 2017 01:05 PM
Last Updated : 18 Jun 2017 01:05 PM

சுவையான செஃப் சமையல்! - காளான் புலாவ்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - அரை கிலோ

பட்டன் காளான் - 100 கிராம்

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

வெங்காயம் - 4

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - அரை கப்

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

ஏலக்காய், பட்டை, கிராம்பு - சிறிதளவு

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

முந்திரி - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

எணணெய், நெய் - 2 டேபிள் ஸ்பூன்



எப்படிச் செய்வது?

காளானை உப்பு நீரில் போட்டு அலசுங்கள். காளானின் பின்புறம் இருக்கும் பழுப்பு நிறம் போகும்வரை சுத்தம் செய்யுங்கள். குக்கரில் எண்ணெய், நெய் விட்டுச் சூடாக்கி கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டுத் தாளியுங்கள். இஞ்சி-பூண்டு விழுது , நறுக்கிய வெங்காயம், புதினா கொத்தமல்லி, காளான், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். கரம் மசாலா, உப்பு, தேங்காய்ப் பால், அரிசி சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி மூடிவிடுங்கள். 2 விசில் வந்ததும் அடுப்பைக் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்துப் பிறகு அணைத்துவிடுங்கள். சூடு ஆறியதும் நெய்யில் பொரித்த முந்தரி, வெங்காயத்தைச் சேர்த்துப் பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள். வெங்காய ராய்தாவுடன் பரிமாறுங்கள்.


செஃப் காவிரிநாடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x