Last Updated : 09 Jun, 2019 10:19 AM

 

Published : 09 Jun 2019 10:19 AM
Last Updated : 09 Jun 2019 10:19 AM

குழந்தைகளுக்கான மாலை விருந்து - கிரில்டு பனீர்

என்னென்ன தேவை?

நறுக்கிய பனீர் துண்டுகள் – ஒரு கப்

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் துண்டுகள் ஆகியவை ஒன்றாகச் சேர்த்து - ஒரு கப்

இஞ்சி - பூண்டு விழுது - சிறிது

தனியாத் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் காய்கறிகள், பனீர், இஞ்சி - பூண்டு விழுது, தனியாத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். தவாவில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவைத்துள்ள காய்கறிகளையும் பனீர் துண்டுகளையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு கிரில் செய்யும் குச்சிகளில் பனீர், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை அடுத்தடுத்து சொருகி கேஸ் அடுப்புத் தீயில் சற்று உயரமாகத் தூக்கிப் பிடித்து அனல் படும்படி வாட்டினால் கிரில் அடுப்பில் செய்ததைப் போன்ற கிரில் பனீர் வறுவல் தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x