Last Updated : 14 Apr, 2019 01:31 PM

 

Published : 14 Apr 2019 01:31 PM
Last Updated : 14 Apr 2019 01:31 PM

வகை வகையான சித்திரை விருந்து: கிராமத்து மீன் குழம்பு

என்னென்ன தேவை?

மீன் – அரை கிலோ

புளி - எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய் - 15

தனியா - 4 டீஸ்பூன்

சிறிய வெங்காயம் - 30

பூண்டுப் பல் - 4

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 3

உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு

மாங்காய்த் துண்டுகள் - 5

வெந்தயம் - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மீனைக் கழுவி, தயிரும் உப்பும் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளுங்கள். மிளகாய், தனியா இரண்டையும் வறுத்து அம்மியில் அரைத்துக்கொள்ளுங்கள். நான்கு வெங்காயத்தையும் 4 பூண்டுப் பல்லையும் நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

samayaljpgகுறிப்பு: ராஜபுஷ்பா

விறகு அடுப்பில் மண் சட்டியை வைத்துச் சூடானவுடன் நல்லெண்ணெய் விட்டு, வெந்தயத்தைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துச் சிவக்க வதக்குங்கள். அவற்றோடு நசுக்கிய பூண்டையும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிப் பின் தக்காளியைச் சேர்த்து அது கரையும்வரை வதக்குங்கள். அரைத்து வைத்துள்ள மிளகாய் - தனியா கலவை, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் நறுக்கிய மாங்காய் துண்டுகளைச் சேருங்கள். மாங்காய் வெந்ததும் மீனைச் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வெந்தயப் பொடியைத் தூவி இறக்குங்கள். இந்த மீன் குழம்பை மறுநாள் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x