Published : 22 Sep 2014 04:58 PM
Last Updated : 22 Sep 2014 04:58 PM

இஞ்சி குழம்பு

என்னென்ன தேவை?

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் - 4

மல்லி - 2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்

இஞ்சி - சிறு துண்டு

சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பக்குவமாக வறுத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நீர்க்கக் கரைத்த புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். இந்தக் குழம்பை மண்சட்டியில் வைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.

குறிப்பு: பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x