Last Updated : 11 Aug, 2014 02:45 PM

 

Published : 11 Aug 2014 02:45 PM
Last Updated : 11 Aug 2014 02:45 PM

பாப்கார்ன் உருளை வடைகறி

என்னென்ன தேவை?

பாப்கார்ன் - 2 கப்

உருளைக் கிழங்கு - 1

கேரட் துருவல் - 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

சோள மாவு - 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு

தேங்காய்ப் பால் - 1 கப்

தக்காளி - 2

பூண்டு - 3 பற்கள்

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

சோம்பு - அரை டீஸ்பூன்

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு இவற்றுடன் பாப்கார்னைச் சேர்த்து நீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இதனுடன் மசித்த உருளைக் கிழங்கு, சோள மாவு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பிசையவும். இதை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு தனியாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். கலவை நன்றாகச் சேர்ந்து கொதித்ததும் உதிர்த்த வடையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கிவைத்து, மல்லித் தழை தூவிப்பரிமாறவும்.

குறிப்பு: ராஜகுமாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x