Published : 17 Dec 2017 10:41 AM
Last Updated : 17 Dec 2017 10:41 AM

மணக்கும் நெல்லை! - உளுந்து சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப

தோல் நீக்காத உளுந்து - அரை கப்

வெந்தயம் - 1 டீஸ்பூன

பூண்டு - 8 பல

நல்லெண்ணெய் - 7 டீஸ்பூன

தேங்காய் - அரை மூடி (துருவியது)

உப்பு - தேவையான அளவ

எப்படிச் செய்வது?

உளுந்து பயறுடன் வெந்தயத்தைப் போட்டு வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். இதைப் பச்சரியுடன் சேர்த்துக் கழுவி பத்து நிமிடம் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்துவிட்டு இரண்டரை கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு பூண்டை லேசாக நசுக்கி இதில் சேர்த்து பிரஷர் குக்கரில் சாதம் வேகவிடுவதுபோல் வேகவிடுங்கள். சூடு ஆறியதும் ஒரு அகலமான தட்டில் சாதத்தைக் கொட்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிவிடுங்கள். பிறகு தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x