Last Updated : 05 Nov, 2017 11:42 AM

 

Published : 05 Nov 2017 11:42 AM
Last Updated : 05 Nov 2017 11:42 AM

குடைமிளகாய் மசாலா

என்னென்ன தேவை?

குடை மிளகாய் - 2

கேரட் - 2

உருளைக் கிழங்கு - 2

இஞ்சி, பூண்டு (துருவியது) - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

வெங்காயம் - 2

அரைக்க

தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்

ஊறவைத்த பாதாம் - 15

சீரகம் - கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 7

கசகசா - அரை டீஸ்பூன்

தாளிக்க

பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு

நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து நறுக்கிக்கொள்ளுங்கள். குடைமிளகாயையும் கேரட்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இஞ்சி-பூண்டுத் துருவல், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கிக்கொள்ளுங்கள். பிறகு குடைமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய்கள் வெந்ததும் வேகவைத்துள்ள உருளையையும் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டுக் கெட்டியானவுடன் இறக்கிவிடுங்கள்.

சப்பாத்தி, பூரிக்குச் சுவையாக இருக்கும். பேலியோ டயட்டில் இருப்பவர்கள் உருளையைத் தவிர்த்துவிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x