Last Updated : 29 Oct, 2017 12:35 PM

 

Published : 29 Oct 2017 12:35 PM
Last Updated : 29 Oct 2017 12:35 PM

பலம் தரும் பேரீச்சை: பேரீச்சை கீர்

ரும்புச் சத்து அதிகமுள்ள பேரீச்சம்பழத்தைப் பொதுவாக ஒன்று, இரண்டுக்கு மேல் பலர் சாப்பிட மாட்டார்கள். இனிப்பாக இருப்பதால் பலரால் தொடர்ந்து நிறையச் சாப்பிட முடியாது. “பேரீச்சையைத் தனியாகச் சாப்பிடாமல், விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடலாம்” என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜன். பேரீச்சையைவைத்துச் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை அவர் பகிர்ந்துகொள்கிறார்.

பேரீச்சை கீர்

என்னென்ன தேவை?

பேரீச்சை - 8 பழம்

முந்திரி - 4

பால் - ஒன்றரை கப்

சர்க்கரை - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பேரீச்சை, முந்திரி இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதனுடன் ஒரு கப் பால், முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இதைச் சர்க்கரையுடன் சேர்த்து ஐந்து நிமிடம் காய்ச்சி, மீதமுள்ள பாலைச் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x