Published : 29 Sep 2014 09:48 AM
Last Updated : 29 Sep 2014 09:48 AM

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது 2 பயணிகளின் உடை மைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அவர்கள் இருவரும் ஜீன்ஸ் பேன்ட்களில் தங்க பட்டன்களை பொருத்தி மறைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர்.

ஒரு பேன்டில் 12 தங்க பட்டன் வீதம் 8 பேன்ட்களில் மொத்தம் 96 தங்க பட்டன்களைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதவிர பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 தங்க பட்டன்கள் என இருவரிடம் இருந்து 632 கிராம் எடை கொண்ட 136 பட்டன்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x