ரமணர் சொன்ன பாடம் ‘ரோந்து’ - திரைப்படம் வழியே ஒரு பார்வை

இடது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் | வலது: ‘ரோந்து’ பட ஸ்டில்.
இடது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் | வலது: ‘ரோந்து’ பட ஸ்டில்.
Updated on
2 min read

மலை​யாளத்​தில் வெளி​யாகி இருக்​கிற ரோந்து (Ronth) திரைப்​படம், மனிதத்​தின் பல அடுக்​கு​களை ஆரா​யும் ஒரு படைப்பு எனலாம். இது இரவு ரோந்தில் இருக்​கும் 2 காவலர்​களின் சாதா​ரண​மான, ஆனால் ஆழமான பயணத்​தின் வழி​யாகச் சொல்​லப்​படு​கிற கதை. அவர்​களின் எளிய பயணத்தில் தொடங்​கும் கதை, சமூகத் தீர்ப்​பு​களின் அடித்​தளங்​களையே தகர்க்​கிறது.

படம் தொடங்​கும் முதல் காட்​சி​யிலேயே, நிழல்​கள் நீண்​டு,ய​தார்த்​தத்​தின் சுவாச கணம் கூடும்​போது, நாடகத்​தனம் அகன்​று, அந்த காட்​சி​யின் நேரடி​யான உண்​மை​யின் நெருக்​கம் நம்​மைப் பற்​றிக்​கொள்​கிறது.இவர்​கள் பிர​மாண்​டத்​தைத் துரத்​தும் சூப்​பர் ஹீரோக்​களோ அல்​லது மாறு​வேடத்​தில் பதுங்​கி​யிருக்​கும் வில்​லன்​களோ அல்ல. இவர்​கள், தங்​களுக்​குள் இருக்​கும் அறி​யாமை​யுட​னும் போராடிக்​கொண்​டே, சட்​டம் சாரந்த ஒழுங்​கின் மெல்​லிய கயிற்றை பிடித்​துக் கொண்டு பணி​யில் இருக்​கும் இரண்டு சக மனிதர்​கள்.

மங்​கிய ஒளி​யில் விரி​யும்​சாலைகளில் அவர்​கள் பயணித்​து, இரவின் கணிக்க முடி​யாத முரண்​களை எதிர்​கொள்​ளும்​போது, அவர்​களின் அக உலகிற்​குள் நாமும் பயணிக்​கிறோம்​. அவர்​களின் பலவீனங்​கள், போராட்​டங்​கள் மற்​றும் தார்​மீகசிக்​கல்​களைக் கண்​கூ​டாக கண்டு உணர்​கிறோம். கடமை​யின் ஒவ்​வொரு சாதா​ரணத் தருண​மும் ஆழமான உண்​மை​யின்​ பிர​திபலிப்​பாக மாறுகிறது. அப்​போது, அவர்​களின் சீருடை மெல்ல சாயம் இழந்​து, அவர்​களுக்​குள் இருக்​கும் சாதாரண மனிதர்​கள் வெளிப்​படு​கிறார்​கள்.

“மனிதர்​கள் தாங்​கள் வரையறைத்து வைத்​துள்ள புரிதல் மட்​டத்​திலிருந்​து​தான் பிறரை புரிந்​து​கொள்​கிறார்​கள் என்​பதை உணர்ந்​த​பிறகு, நான் என்​னைபற்றி பிறருக்கு விளக்​கு​வதை நிறுத்​தி​விட்​டேன்,” என்று ஜிம் கேரி கூறியது நினை​வுக்கு வரு​கிறது. துர​திர்​ஷ்ட​வச​மாக, அந்​தப்​புரிதல் பெரும்​பாலும் முன் முடிவு​களால், வதந்​தி​களால் அல்​லது சில வைரல் வீடியோக்​களால் உரு​வாக்​கப்​படு​கிறது.

குறிப்​பாக, காவல்​துறை​யினரைப் போன்ற அதி​கார மையங்​களில் இருப்​பவர்​களை, ஊழல் செய்​யும் அதி​கார வெறியர்​களாகவோ அல்​லது விரைப்​பான கட்​டுப்​பாட்​டின் குறி​யீடுகளாகவோ சுருக்​கிப் பார்த்தே பழக்​கப்​பட்​டு​விட்​டோம். ஆனால், அவர்​களு​டைய பணியை ஏற்​று, காவலர்​களாக ஓரிரவு உலா வந்​தால் எப்​படி இருக்​கும் என்று எத்​தனை முறை யோசித்​துப் பார்த்​திருக்​கின்​றோம்? மனிதத்​தின் இருண்ட பக்​கங்​களைக் கண்​டு​விட்​டு, மீண்​டும் வீடு திரும்பி தங்​கள் குழந்​தையை கைகளில் ஏந்​தும் தருணங்​கள், அவர்​களுக்கு என்ன மாதிரி​யான மன உளைச்​சலைத் தரும்?

எப்​போ​தாவது சிந்​தித்​திருப்​போ​மா? அன்​றாட நிகழ்​வு​கள், கலை, இசை, சிலரின் சாதனை​கள் என அனைத்​தை​யும், ஒரு புலப்​ப​டாத லென்​ஸின் வழி​யாகவே நாம் பார்க்​கிறோம். இது தனி​நபரின் திறமை​யைத் தாண்டி அவரது ஒழுக்​கத்​தை​யும் சேர்த்தே எப்​போதும் அளவிடு​கிறது. ஓர் இசையமைப்​பாளர், தனது இசை​யால் உருகவைக்​கிறார், ஆனால் சமூக ஊடகங்​களோ, அவரது தனிப்​பட்ட குணநலன்​களைப் பற்​றிப்பேசும்​படி நம்​மைத் தூண்​டு​கிறது.

சிறந்த மனிதர்​களிடம் அவர்​களு​டைய திறமை​களைத் தாண்டி அவர்​கள் எவ்​வகை​யான குற்​றங்​குறை​களுக்​கும் அப்​பாற்​பட்டு இருக்க வேண்​டும் என்ற எதிர்​பார்​ப்பில், நாம் பலவீன​மான அடித்தளத்தை அல்​லவா உரு​வாக்​கு​கிறோம்? ‘ரோந்​து’ திரைப்​படம் பார்க்​கும்​போது நினை​வுக்கு வந்த ஒரு சம்​பவம் இதைத் தெளி​வாகக் காட்​டு​கிறது.

திரு​வண்​ணா​மலை​யில் உள்ள புனித​மான ஆசிரமத்​தில்​, தீய குணங்​களுக்​காக அறியப்​பட்ட ஒரு நபர், பளபளப்​பான வெள்​ளைச் சட்​டை​யுடன் நுழைந்​தார். அவருடைய வருகை அங்​குள்ள பக்​தர்​களை கலக்​கமடையச் செய்​தது. ஒரு பக்​தர்​, பக​வான் ரமணரை அணுகி, இப்​படிப்​பட்ட நபரை இந்த இடத்​துக்​குள் எப்​படி அனு​ம​திக்கலாம் என்று கேட்​கிறார்.

பகவான் ரமணர், “அவரது வெள்​ளைச் சட்டை எவ்​வளவு சுத்​த​மாக​வும்,பளபளப்​பாக​வும் இருக்​கிறது பார்” என்று பதிலளித்​தார். அது உபதேச​மும் அல்ல, தீர்ப்​பும் அல்ல. நாம் பெரும்​பாலும் புறக்​கணிக்​கும் ஒன்​றை, நிஜ​மாகவே உற்​று​நோக்​கச் செய்​யும் மென்​மை​யான அறி​வுறுத்​தல். இந்த காலத்தின் தேவை என்​னவென்​றால், நாம் கலை​யை​யும் கலைஞனை​யும் ஒன்​றாக அணுகி அளவிடு​வதை நிறுத்த வேண்​டும். அவர்​களின் தனிப்பட்ட வாழ்​வில் வெளிப்​படும் செயல்​கள், அவர்​களது கலை​யால் வெளிப்​படும் மனிதநே​யத்தை காயப்​படுத்​தாதவரை, கலை​யை​யும் கலைஞனை​யும் ஒன்​றாக அணுக வேண்​டிய அவசி​யமில்லை என்​பதை உணர​வேண்​டும்.

‘ரோந்​து’ திரைப்​படம் வெளிப்​படை​யான யதார்த்​தத்​துடன் சித்​தரிப்​பது​போல, வாழ்க்கை தெளி​வான கதா​நாயகர்​களையோ வில்​லன்​களையோ கடந்து​வரும் வாய்ப்பை வழங்​கு​வ​தில்​லை. மாறாக அது, நாம் தேர்ந்​தெடுக்​கும் வாய்ப்​பு​களை​யும், அதன் முடிவு​களை​யும் அவற்​றை புரிந்​துகொள்​ளும் தருணங்​களை மட்​டுமே வழங்​கு​கிறது.

ஒவ்​வொரு சீருடைக்​குள்​ளும், ஒவ்​வொரு கலைஞனுக்​குள்​ளும், ஒவ்​வொரு மனிதருக்​குள்​ளும் ஒரு கதை உறங்​கிக்​கிடக்​கிறது. அது, நமக்கு அறி​முக​மாகி​யுள்ள வாழ்​வெனும் முன்​கதை சுருக்​கத்தை விட​வும் சிக்​கலானது. நாம் நமக்கே வழங்​கும் கருணை​யை, மற்​றவர்​களுக்​கும் முன்​தடைகள்ஏது​மின்றி வழங்க வேண்​டும்.

இறு​தி​யாக, ‘நன்​மை’ என்​பது பரிபூரணத்​தில் இல்​லை, அது நம் பார்​வை​யில் உள்​ளது என்​பதை புரிந்​து, மற்​றவர்​களைக் குறித்து அவர்​கள் எப்படிபட்டவர்​களாக இரு​ப்பார்​கள் என்ற முன்​முடிவு​கள் கொண்டு அளப்​பதை விட, “மக்​களிடம் நாம் எதைக் காண விரும்புகிறோம்?” என்ற நமது எண்​ணத்​தின் தேர்வே மிக முக்​கிய​மானது என்று உணர வேண்டும். சில நேரங்​களில்​ புறத்​தை மட்​டும்​ பார்ப்​பதும்​ போது​மானது. பகவான்​ ரமணர்​ வெள்​ளை சட்டையை மட்​டும்​ ​பார்​த்​தது போல! - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in