நவ.24-ல் ஓடிடியில் ‘காந்தாரா’ வெளியாகும் என தகவல்

நவ.24-ல் ஓடிடியில் ‘காந்தாரா’ வெளியாகும் என தகவல்
Updated on
1 min read

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'காந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு கூடியது. அதெபோல், கருத்தியல் ரீதியில் எதிர் விமர்சனங்களையும் கொண்ட ‘காந்தாரா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை ஈட்டியது. இந்நிலையில், இந்தப் படம் இம்மாதம் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in