வீரப்பன் தொடருக்கு எதிராக வழக்கு

ஏ.எம்.ஆர். ரமேஷ்
ஏ.எம்.ஆர். ரமேஷ்
Updated on
1 min read

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவர் தமிழில், குப்பி, காவலர் குடியிருப்பு, ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்களை இயக்கியவர். இப்போது வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்கி வருகிறார். வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார்.

“வனயுத்தம் படத்தில் வீரப்பன் கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் வெப் தொடராக எடுக்கிறேன். போலீஸ் அதிகாரிகள், வீரப்பனுடன் நெருங்கிப் பழகியவர்களுடன் பேசி பல தகவல்களை சேகரித்துள்ளேன். அதை வைத்து இயக்குகிறேன். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது.

40 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இன்னும் 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இத்தொடருக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்து லட்சுமி, பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதை சட்டரீதியாகச் சந்திப்பேன்’’ என்று ஏ.எம்.ஆர். ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in