Published : 16 Sep 2017 12:50 PM
Last Updated : 16 Sep 2017 12:50 PM

‘தி இந்து’ தமிழ் இலக்கியப் பக்கங்கள் மகிழ்ச்சி தருபவை: கண்மணி குணசேகரன்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கண்மணி குணசேகரன், எழுத்தாளர்.

‘தி இந்து’ நாளிதழில் எனக்கு முதலில் பிடித்த ஒரு விஷயம் என்றால், நாளிதழைக் கையில் எடுத்தால் ‘பளிச்’சென்று தெரியும் அதன் நேர்த்தியான தாளும் அச்சும்தான். நாட்டு நடப்பு கள் தொடர்பாக நறுக்கென்று குட்டுவது போன்ற கருத்துப் படங்களையும் ரசிப்பேன்.

ஒரு எழுத்தாளராக ‘தி இந்து’வின் இலக்கியப் பக்கங்கள் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியைத் தருபவை. வாரம் ஒரு எழுத்தாளரிடம் ‘இப்போது படிப்பதும் எழுதுவதும்’ என்று கேட்டுப் பிரசுரித்தது நல்ல அம்சம்.

வாரம் ஒரு நல்ல சிறுகதையாவது ‘தி இந்து’வில் வர வேண்டும். இது நல்ல வாசிப்பை நோக்கிச் சமூகத்தை உந்திச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.

அந்தந்த வட்டாரங்களின் சிறப்பு அம்சங்களை நுண் வரலாற்றுப் பார்வையோடு பதிவுசெய்ய வேண்டும். நாட்டார் தெய்வங்களைப் பற்றியெல்லாம் எழுத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x