Published : 16 Sep 2017 11:24 AM
Last Updated : 16 Sep 2017 11:24 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்.
தமிழ் நாளிதழ் இயக்கத்தில் ‘தி இந்து’ ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்திருக்கிறது. ‘தி இந்து’வின் நடுப்பக்கக் கட்டுரைகள் அதன் அடையாளமாகியிருப்பதற்கு அக்கட்டுரைகளின் தீவிரத்தன்மையும், அடிப்படையான நேர்மையுமே காரணம்.
இன்றைய தலைமுறை எதிர்நோக்கியிருக்கும் சவால்களைத் தமது இறுக்க மான கொள்கை சார்ந்த முன்முடிவுகளால் விடை தேட முயலும் தரப்புகள் எல்லாரிடமிருந்தும் நேர்மையான, சுதந்திரச் சிந்தனை கொண்ட ‘தி இந்து’ கட்டுரையாளர்களுக்கு வரும் எதிர்ப்புகள் புரிந்துகொள்ளக்கூடியதே.
ஒரு மொழிபெயர்ப்பாளராக, ‘தி இந்து’வின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை.
கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் சிலவும் உண்டு. ராமதுரை உள்ளிட்ட வெகுசிலரின் கட்டுரைகளைத் தவிர, அறிவியல் கட்டுரைகள் அதிகம் வெளிவருவதில்லை. ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை நூலைப் பற்றி மிக விரிவான, காட்டமான விமர்சனம் வந்தது. தவறான மொழிபெயர்ப்பு பற்றி அக்கறையோடு விமர்சிக்கும்போது, நல்ல மொழிபெயர்ப்புகள் பற்றியும் கட்டுரைகள் வர வேண்டும். பழைய சரித்திரத் தொடர் கதைகளை மீளப் பிரசுரிப்பதையும் தவிர்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT