Published : 16 Sep 2017 11:31 AM
Last Updated : 16 Sep 2017 11:31 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அழகிய பெரியவன், எழுத்தாளர், ஆசிரியர்.
ஓர் அறிவியக்கமாக ‘தி இந்து’ தன்னை நிறுவியிருக்கிறது. ஒருவேளை ‘தி இந்து’ தமிழ் நாளேடு வெளியாகாமல் இருந் திருந்தால், அயோத்திதாசப் பண்டிதரோ, இரட்டைமலை சீனிவாசனோ, ஞானக்கூத்தனோ, இன்குலாப்போ, அஃ பரந்தாமனோ, நா.காமராசனோ, நா.முத்துக்குமாரோ, அப்துல் ரகுமானோ, ரோஹித் வெமுலாவோ, கண்ணைய்யா குமாரோ, ஜிக்தேஷ் மோவானியோ, அனிதாவோ, கௌரி லங்கேஷோ எந்தத் தமிழ் நாளேட்டின் நடுப்பக்கத்தில் இடம்பிடித்திருப்பார்கள்?
குடிச் சீரழிவு, சூழல் சீர்கேடு, மதவாதம், ஊழல், கல்வி வணிகம், மணல் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றுக்கு எதிராகக் கட்டுரைகள், செய்திகள் மூலம் மிகுந்த நெஞ்சுரத்தோடு ‘தி இந்து’ தமிழ் பணியாற்றியிருக்கிறது.
‘இந்து டாக்கீஸ்’, ‘பெண் இன்று’, ‘மாயாபஜார்’ போன்ற இணைப்பிதழ்களும் எனக்குப் பிடிக்கும். இலக்கியப் பக்கத்தைத் தனி இணைப்பிதழாகத் தரலாம். இலக்கிய நூல்களுக்குப் பரிசு, இலக்கியத் திருவிழா போன்றவற்றையும் ‘தி இந்து’ முன்னெடுக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT