Published : 16 Sep 2017 11:28 AM
Last Updated : 16 Sep 2017 11:28 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
புவியரசு, கவிஞர், மொழிபெயர்ப்பாளர்.
இலக்கியத்துக்கு மற்ற பத்திரிகைகள் முதலிடம் கொடுக்காத நிலையில், ‘தி இந்து’ அதற்கு முதலிடம் கொடுத்ததே முதலில் ஈர்த்தது. நடுப்பக்கத்தில் நல்ல கட்டுரைகள் வருகின்றன.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்த்த பின்பே செய்திகள் வெளிவரும். ‘தி இந்து’ தமிழும் அதைப் பின்பற்றுகிறது.
நடுப்பக்கத்தில் நல்ல கட்டுரைகள், அபூர்வ விஷயங்களைத் தாங்கிய கட்டுரைகள் வருகின்றன, விவாதப் பொருளாகவும் மாறுகின்றன.
இப்போது எல்லாரும் தடாலடிச் செய்திகளையே விரும்புகிறார்கள். அது இல்லாத நாளிதழ் ‘தி இந்து’. சனி, ஞாயிறுகளில் தவறாமல் வாங்குகிறேன். அப்படி ஒருவேளை வாங்காவிட்டால் சிக்கலாகிவிடுகிறது. ஏனென்றால், ‘சனிக் கிழமை ‘தி இந்து’ பார்த்தீர்களா? ஞாயிறன்று ‘தி இந்து’ பார்த்தீர்களா?’ என்று முக்கிய கட்டுரைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் விவாதிக்க வருகிறார்கள்.
சில சமயங்களில் சார்புநிலை உள்ளதோ என்று தோன்றும்படியான செய்திகள், கட்டுரைகள் இடம்பிடிக்கின்றன. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளையும் நாகரிகமாக விவாதிக்க விடலாம். அவர்களையும் உள்ளே கொண்டுவரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT