Published : 16 Sep 2017 11:38 AM
Last Updated : 16 Sep 2017 11:38 AM

‘தி இந்து’ தமிழ் சொல்லாலும் செயலாலும் சிறப்பு! - ச.சீ. இராஜகோபாலன்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்.

பல நாளிதழ்களை வாங்கினாலும் முதலில் படிப்பது ‘தி இந்து’ நாளிதழே. சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய தலையங்கங்கள் தெளிவைக் கொடுப்பவையாக அமைந்திருப்பது ‘தி இந்து’வின் சிறப்பு.

நடுப்பக்கக் கட்டுரைகள் விவாத மேடையாக அமைகின்றன. பல சமயங்களில் சகோதர இதழ்களான ‘தி இந்து’ ஆங்கிலம் , ஃப்ரண்ட்லைன் கட்டுரைகளின் தமிழாக்கங்கள் நடுப்பக்கங்களை அலங்கரிக்கும். அவற்றை முன்னரே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் படிப்பது மகிழ்ச்சியையும் தெளிவையும் தரும். அடுத்து இணைப்பிதழ்களை ஒரு ஓட்டம் விடுவேன். ‘வெற்றிக்கொடி’ என்னைக் கவரும்.

பஞ்சாயத்து, கூட்டுறவு இயக்கங்களைப் பற்றிய கட்டுரைகள் மக்களாட்சியின்மீது நம்பிக்கையைக் கொடுக்கின்றன. ‘பெண் இன்று’ இணைப்பிதழ் உள்ளடக்கத்திலும், எளிய மொழியாலும் கவர்கிறது.

திரைப்பட நாயகிகளின் கண்ணியத்தைக் குலைக்காத வண்ணம் அவர்களின் படங்கள் வெளியிடப்படுவது ‘தி இந்து’ நாளிதழின் சிறப்பு. சொல்லாலும் செயலாலும் பெண்களுக்கு மரியாதை செலுத்தப்படுவது எனக்கு மகிழ்ச்சி.

வாசகர் பகுதி சிறப்பு. கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது ‘தி இந்து’வின் தனிச் சிறப்பு. அரசுப் பள்ளிகளை முன்னிறுத்துவது பாராட்டுக்குரியது. கூடுதலாகப் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தால், ஓய்ந்த எம் போன்றோர்க்கு காலத்தைக் கழிக்க உதவும். ‘சுடோகு’ தினமும் இடம்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x