Published : 25 Sep 2015 10:44 AM
Last Updated : 25 Sep 2015 10:44 AM

உங்கள் குரல்: ரயில் மீது கற்கள் வீசும் விஷமச் சிறுவர்கள்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில்கள் வண்ணாரப்பேட்டை- வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, ரயில் பெட்டிகள் மீது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அடிக்கடி கற்களை வீசி எறிகின்றனர். இதனால், பல பயணிகள் காயமடைகின்றனர். அப்பகுதியை ரயில் கடக்கும் போது, அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.ராகவேந்திர பட், புட்லூர்

சொகுசு பஸ் நிற்காததால் சிரமம்

சென்னை ராயபுரம் மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் வெள்ளை போர்டு பஸ்கள் மட்டுமே நிற்கின்றன. சொகுசு பஸ்கள் நிற்பதில்லை. அப்பகுதியில் ஏராளமான மருத்துவமனைகள், பள்ளிகள் இயங்கிவரும் நிலையில், அங்கு சொகுசு பஸ்கள் நிற்காமல் செல்வது பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வெள்ளை போர்டு பஸ்ஸுக்காக வெகுநேரம் காத்திருக்கவேண்டி உள்ளது. எனவே அப்பகுதியில் சொகுசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகர், மண்ணடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x