Published : 07 Jul 2015 10:37 AM
Last Updated : 07 Jul 2015 10:37 AM

எண்ணென்ப... கவுரவக் கொலைகள்

# இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கவுரவக் கொலைகளின் எண்ணிக்கை 1000

# கவுரவக் கொலை செய்யப்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி வயது. 18 - 32 பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 14 ஆகக் குறைக்க வேண்டும் என்று வட இந்திய மாநிலங்களில் எழும் குரல்களின் பின்னணியில் இருப்பது, காதல் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் எண்ணம்தான்.

# 13 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. அதாவது ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்தூர், தஞ்சை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்.

# தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் கவுரவக் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60

# கவுரவக் கொலை செய்யப்படுபவர்களில் பெண்களின் சதவீதம் 95. இவர்களில் 98 % உயர் சாதிப் பெண்கள். மீதம் 5%-ல் 99%பேர் தலித் ஆண்கள்.

# கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உயர் சாதிப் பெண்களைக் காதலித்ததால் கொலை செய்யப்பட்ட தலித் ஆண்களின் எண்ணிக்கை 12

# கலப்பு மணம் செய்துகொள்ளும் தலித் பெண்களில், உயர் சாதியைச் சேர்ந்த ஆண்களால் கைவிடப்படுபவர்களின் சதவீதம் 84. தலித் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் உயர் சாதி ஆண்கள் பலர், சில ஆண்டுகளில் அப்பெண்களை விரட்டிவிடுகிறார்கள்.

தொகுப்பு - ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x