Published : 17 Jun 2015 06:01 PM
Last Updated : 17 Jun 2015 06:01 PM

தலித் இட ஒதுக்கீடு மிகவும் அவசியம்: சங்கர்

செய்தி:>நிகர்நிலைப் பல்கலை.களிலும் இடஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சங்கர் கருத்து:

திருமாவளவன் கோரிக்கை மிகவும் நியாயமானது. இட ஒதுக்கீடு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களில் கொஞ்சம் பேராவது படிக்க எதுவாக இருக்கும். நாடு எவ்வளவோ முன்னேறியபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தி வருவதை தினமும் ஊடகத்தில் காண்கிறோமே.

எப்படி இந்த சமுகத்திற்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று கேட்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் தலித் மக்கள் இட ஒதுக்கீடு இருந்தும் அதை பயன்படுத்த போதுமான வசதி இல்லாத சூழலும் இருக்கிறது. உயர் வகுப்பினர் மோடியை வெறித்தனமாக ஆதரிக்க முக்கிய காரணம் அவர் இட ஒதுக்கீடை நீக்கிவிடுவார் என்று எதிர்பார்ப்புதான்.

ஆனால் இட ஒதுக்கீட்டை நீக்க எவராலும் முடியாது. தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் மீது கை வைத்தால் அவர்களது ஆட்சி கடும் சரிவை சந்திக்கும். ஐ ஐ டி விவகாரம் ஒரு சாம்பிள் தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x