Published : 27 Jun 2015 04:59 PM
Last Updated : 27 Jun 2015 04:59 PM

சிவக்குமார் நேர்மையான மனிதர் : மன்னன் மன்னன்

செய்தி:>ஃபேஸ்புக்கில் இனி பதிவிடப்போவதில்லை: சிவகுமார் வருத்தம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மன்னன் மன்னன் கருத்து:

ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று எத்தனை எத்தனை பெரியவர்கள் சொன்னாலும். இந்த மக்கள் வளர்ந்த தொழில்நுட்பத்தில் வளராத காலத்தின் கருத்துகளை ஜாதி அடையாளங்களை புகுத்துவது. இன்னும் பல ஆயிரம் மக்கள் ஜாதி வெறியோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகுகிறது.

திரு.சிவக்குமார் சார் போன்ற நல்லவர்களை மனம் நோக செய்வது நல்லது இல்லை. சிவக்குமார் சார் எவ்வளவு தூய்மையானவர் என்று பல எழுத்தாளர்கள் திரைத் துறை சார்ந்தவர்கள் எழுதி இருக்கிறார்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒரு நாளிதழில் சிவகுமார் சார் ஒரு அரசியல்வாதிக்கு குடும்ப திருமண பத்திரிகை வைக்கச் சென்று வந்ததை புகைப்படம் எடுத்து முதல்பக்கத்தில் போட்டார்கள்.

அந்த ஒரு புகைப்படமே சாட்சி இவர் எவ்வளவு தூய்மை ஆனவர் என்பதற்கு. அந்தப் புகைபடத்தில் அந்த அரசியல்வாதி இவரை வியந்து பார்த்து மிகுந்த மரியாதையுடன் வணக்கம் சொல்வது தெரியும். வணக்கம் சொல்கிறார் என்றால் இவரின் எளிமை நேர்மை தூய்மை நேர்மை வாய்மை அத்தனையும் கொண்டவர் திரு சிவகுமார் சார் என்று நாம் அறிந்து கொள்ளலாம் மனம் வருத்தம் அடையாமல் இருக்க எல்லாம் வல்ல சூட்சம சக்தியை வேண்டுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x