Published : 22 May 2015 07:02 PM
Last Updated : 22 May 2015 07:02 PM

பயணிகளின் தவிப்புக்கு ஆளுங்கட்சி பொறுப்பு: ஆஞ்சநேயன்

செய்தி:>ஜெயலலிதா வருகை எதிரொலி: அண்ணா சாலையில் வாகன ஓட்டிகள், பயணிகள் தவிப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆசீர்வாதம் ஆஞ்சநேயன் பொறுப்பு:

சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதினால் ஏற்படும் விளைவு. ஒரு மாநாடோ, முக்கிய நிகழ்வுகளோ நடக்கும்போது அது காவல்துறையினருக்கு தெரிவிக்கப்படும். அப்பொழுது காவல்துறையினர் வாகனங்கள் எந்த வழியில் வரவேண்டும், எங்கு நிறுத்தப்படவேண்டும் என்றெல்லாம் அறிவித்து ஒழுங்குப்படுத்துவார்கள்.

ஆனால் இன்று வெளியூர்களில் இருந்து சாரை சாரையாக வாகனங்கள் திடீரென்று வந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

மக்கள் நெரிசல் மிக்க சென்னை போன்ற மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் அரசியல் கட்சிகள் இனிமேல் தங்கள் நிகழ்வுகளை திட்டமிட வேண்டும். இல்லையெனில் பயணிகளின் தவிப்புகள் தொடரும். அதுவும் ஆளும்கட்சி இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x