Published : 07 Apr 2015 12:10 PM
Last Updated : 07 Apr 2015 12:10 PM

ஆந்திர போலீஸ் நடவடிக்கை நியாயமே: விஜயராகவன்

செய்தி:>செம்மரக் கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் பலி

'தி இந்து' ஆன்லைன் வாசகர்விஜயராகவன்கருத்து:

காட்டிலிருந்து மரம் வெட்டுவது கடத்துவதற்காகத்தான் என்று தமிழ் தொழிலாளிகளுக்கு தெரியாதா? சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அச்செயலில் ஈடுபடுபவர்கள் குற்றவாளிகளே.

ஒரு காடு வளர எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கோடிக் கணக்கில் லாபம் ஈட்ட கடத்தும் முதலாளியும் ஆயிரக்கணக்கில் கூலி கிடைக்கும் என்று செல்லும் தொழிலாளியும் அக்காடுகளை கபளீகரம் செய்ய அனுமதிக்க முடியுமா?

அத்துமீறி காட்டுக்குள் திரிபவர்களை கண்டவுடன் சுட ஆந்திர வனத்துறை ஏற்கெனவே ஆணையிட்டுள்ள நிலையில் நூற்றுகணக்கானவர்கள் கடத்தலில் ஈடுபட்டால் சுட்டுத் தள்ளுவது நியாயமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x