Published : 07 Mar 2015 01:30 PM
Last Updated : 07 Mar 2015 01:30 PM

மாறவேண்டியது நாம்தான்: ஆல்பின்

'வாக்களிக்கலாம் வாங்க' பகுதி:>முகேஷ் சிங் பேட்டி எத்தகையது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆல்பின் கருத்து:

'நிர்பயா' வழக்கின் முக்கிய குற்றவாளி, பெண்கள் குறித்து மிகவும் மோசமாக மதிப்பீடு செய்து தெரிவித்துள்ள கருத்துகள், ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மை.

என்றாலும், பெரும்பான்மை ஆணாதிக்கமாகி உள்ள ஓர் இந்தியச் சமூகத்தின் இன்றைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றால் அது மிகையாகாது.

"ஆண்கள் ஆண்கள்தான்" என்று வாதிட்ட முலாயம் சிங் மற்றும் அவரது 'முதல்வர்' மகனின் அண்மைகால கூற்றுக்களை எல்லாம் நாம் எளிதில் மறக்க முடியுமா?

என்னைப் பொறுத்தவரை, பெண்கள் குறித்தான இவர்களின் மதிபீட்டிற்கும் - 'நிர்பயா' வழக்கின் குற்றவாளியின் மதிபீட்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதுதான். அடிப்படை நிலையிலேயே நாம் மாறவேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x