Published : 02 Aug 2017 10:10 AM
Last Updated : 02 Aug 2017 10:10 AM

உலக தாய்ப்பால் வார கொண்டாட்டம்: 40 சதவீத பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர்;அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் தகவல்

இந்தியாவில் பிறந்த குழந்தை களுக்கு முதல் 6 மாதம் வரை 40 சதவீதம் பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர் என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் நலத் துறைத் தலைவர் டாக்டர் எம்.ஏ.அரவிந்த் தெரிவித்துள்ளார். “

உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் நலத் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் தலைமையில் நடந்த மனிதச் சங்கிலியில் ஆர்.எம்.ஏ.ரமேஷ், துறையின் தலைவர் எம்.ஏ.அரவிந்த் உட்பட டாக்டர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று வருங்கால தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. வரும் 3-ம் தேதி இளநிலை, முதுநிலை பயிற்சி டாக்டர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 4-ம் தேதி செவிலியர் மற்றும் செவிலியர் மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 5-ம் தேதி அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 6-ம் தேதி தாய்மார்களுடன் கலந்துரை யாடலும் நடைபெறும். 7-ம் தேதி பரிசு வழங்குதல் மற்றும் நிறைவு விழா நடைபெறுகிறது. உலக தாய்ப்பால் வார விழா குறித்து குழந்தைகள் நலத் துறைத் தலைவர் டாக்டர் எம்.ஏ.அரவிந்த் கூறியதாவது: உலகில் வளர்ந்த நாடுகளில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பெண் கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். 5 வயதுக்குள் உள்ள குழந்தைகள் உயிரிழப்புக்கு நிமோனியா சளி மற்றும் வயிற்றுப் போக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதனைத் தடுப்பதற்கான அனைத்து சக்திகளும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு 2 வயதுவரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

முதல் 6 மாதத்துக்குப் பின்னர் தாய்ப்பாலுடன் இட்லி, பருப்பு சாதம் போன்ற இணை உணவுகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. இவ்வாறு டாக்டர் எம்.ஏ.அரவிந்த் தெரிவித்தார். குழந்தைகளுக்கு 2 வயதுவரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதத்துக்குப் பின்னர் தாய்ப்பாலுடன் இட்லி, பருப்பு சாதம் போன்ற இணை உணவுகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x