Published : 27 Aug 2017 05:15 PM
Last Updated : 27 Aug 2017 05:15 PM
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'குப்பத்து ராஜா' படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமான குப்பம் போன்ற அரங்குகள் அமைத்து பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிய, அன்பறிவு மற்றும் திலீப் சுப்புராயன் ஆகியோர் சண்டை இயக்குநர்களாக பணிபுரிந்துள்ளார்கள்.
முழுமையாக படப்பிடிப்பு முடிந்துள்ள 'குப்பத்து ராஜா' படம் குறித்து தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'குப்பத்து ராஜா' படத்தின் கதையை பாபா பாஸ்கர் எங்களிடம் கூறியபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம் . பிரபல நடன இயக்குநரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான இயக்குநர் இருக்கிறார் என்பது எங்களுக்கு அன்று தான் தெரிந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது. ரஜினி சாரின் வெற்றித் தலைப்பு என்பது மட்டுமன்றி இக்கதைக்கும் மிக சரியாக பொருந்துவதால் 'குப்பத்து ராஜா' தலைப்பை சூட்டினோம்
இவ்வாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT