Published : 27 Aug 2017 05:13 PM
Last Updated : 27 Aug 2017 05:13 PM
புதுமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
'2.0', 'இப்படை வெல்லும்' மற்றும் 'கரு' ஆகிய படங்களைத் தொடர்ந்து, அடுத்த தயாரிப்புக்கான கதைகளைக் கேட்டு வந்தது லைகா நிறுவனம். புதுமுக இயக்குநர் நெல்சன் கூறிய கதை பிடித்துவிடவே, அதன் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
நயன்தாரா, யோகிபாபு நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இக்கதை முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையாகும். 'கோலமாவு கோகிலா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இரண்டு கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் ஆகியவற்றை இயக்கி, மிகவும் பிரபலமானவர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT