Published : 23 Jul 2017 09:59 AM
Last Updated : 23 Jul 2017 09:59 AM

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை வகை பிரித்து வழங்க பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்: மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அழைப்பு

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவி கள் இணைந்து குப்பைகளை வகை பிரித்து வழங்க பெற் றோரை அறிவுறுத்துமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகே யன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவி களுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம் ஷெனாய் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந் தினராக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது:

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் குப்பை உருவாகும் வீடுகளிலேயே வகை பிரித்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவ, மாணவிகளும் பங்கேற்று, அவரவர் வீடுகளில் உருவாகும் குப்பைகளில் எது மக்கும் குப்பை, எது மக்காத குப்பை என பெற்றோர்களுக்கு விளக்கி, வீட்டிலிருந்து குப்பைகளை வழங்கும்போதே வகை பிரித்து வழங்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் சென்னை மாநகரம் தூய்மையான நகரமாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது, ‘மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நினைத்தை சாதிக்க, இலக்கு நிர்ணயித்து, அதன்படி செயல்பட வேண்டும். 13 முதல் 19 வயது வரையிலான பதின்ம பருவம், அதிகம் கேள்வி கேட்கும் பருவம். இந்த காலத்தில் ஒழுக்கத்துடன், கஷ்டப்பட்டு படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

முகாமில், மாநகர கூடுதல் காவல் ஆணையர்கள் பெரியய்யா (போக்குவரத்து), எச்.எம்.ஜெயராம் (சட்டம், ஒழுங்கு), இணை ஆணையர் சந்தோஷ்குமார், திரைப்பட நடிகர் தாமு, மாநகராட்சி அல்வி அலுவலர் ரஞ்சனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x