Published : 24 Jul 2017 09:36 AM
Last Updated : 24 Jul 2017 09:36 AM
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாள ராக இருந்த கோவை கவுண்டம் பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, சேலத்தில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக அம்மா அணியில் இணைந்தார்.
இணைப்புக்கு பின்னர் நிருபர்களிடம் ஆறுக்குட்டி கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் சூழ்நிலை மாறி, அதிமுக-வில் இரண்டு அணிகள் ஏற்பட்டு கட்சிக்குள் பிரச்சினை எழுந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்காக முதன்முதலாக குரல் கொடுத்து, அந்த அணியில் இணைந்து பணியாற்றி வந்தேன்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல் வம் அணி சார்பில் கோவையில் நடைபெறவுள்ள கூட்டம் தொடர் பான ஆலோசனைக் கூட்டத்துக்கு கோவை வடக்கு மற்றும் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் என்னை அழைக்கவில்லை. இதுதொடர்பாக தலைமையிடம் தொடர்பு கொண்டபோது, எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே, அந்த அணியில் இருப்பது சரியல்ல என்ற நிலை உருவானது.
இதனிடையே, முதல்வர் பழனி சாமி என்னுடைய தொகுதிக்கு பல் வேறு திட்டங்களை அறிவித்தார். தடாகம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.11 கோடி என பல திட்டங்களுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.
இதற்காக பேரவையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். இதனால், கோவை கூட்டம் தொடர் பான ஆலோசனைக்கு என்னை அழைக்கவில்லை. இந்நிலையில் என்னுடைய தொகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்டேன். ஆளுங்கட்சியில் இருந்தால்தான் தொகுதிக்கு திட்டங்களை செய்ய முடியும் என்று மக்கள் கூறினர். எனவே, முதல்வரை சந்தித்து அவரது அணியில் இணைத்துக் கொண்டேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT